close
Choose your channels

நடிகருக்கு இணையா சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை… கிடைத்த பதில் என்ன தெரியுமா?

Monday, August 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பத்மாவதி“, “பாஜீராவ் மஜ்தானி“, “ராம்லீலா“ போன்ற படங்களில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து இருந்தார். கூடவே ஹாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி தனது புதுப்படமான “பைஜு பாவ்ரா“ திரைப்படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். இந்தப் படத்தில் கதாநாயகனாக மீண்டும் தனது ஆஸ்தான ஹீரோ ரன்வீர் சிங்கையே அவர் நடிக்க வைக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன் குறித்து பேச்சு அடிப்பட்டு இருக்கிறது. ஆனால் நடிகை தீபிகா கதாநாயகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு இணையாக நடிகைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பாலிவுட் வட்டாரத்தில் ஏற்கனவே பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார்.

“பைஜு பாவ்ரா” விஷயத்திலும் இதே கொள்கையை நடிகை தீபிகா கடைப்பிடிக்க நினைத்தாராம். இதனால் இந்தப் படத்தில் இருந்து நடிகை தீபிகா கழட்டி விடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது வலுத்து வருகிறது.

ஏற்கனவே பல நடிகர்களின் சம்பளத்தைவிட அதிகச் சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா பாலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடித்து இருக்கும் தன் கணவர் ரன்வீர் சிங்கிற்கு இணையாகச் சம்பளம் கேட்டதால்தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.