close
Choose your channels

10 வருடத்திற்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த டெல்லி எஞ்சினியர்!

Saturday, May 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளிக்காலத்தில் பழகிய காதலியை பத்து வருடங்களுக்கு பின் சந்தித்த டெல்லியை சேர்ந்த எஞ்சினியர், காதலிக்காக தனது மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ராகுல் மிஸ்ரா என்பவரும், பத்மா என்பவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். ஆனால் அதன்பின் கல்லூரி படிப்பிற்காக இருவரும் பிரிந்துவிட்டனர். 10 வருடங்களுக்கு பின் பள்ளி நண்பர்களின் வாட்ஸ் அப் குரூப் மூலம் மீண்டும் பழகிய இருவரும் நாளடைவில் காதலர்களானார்கள். ஆனால் இந்த காதலை ஏற்காத ராகுலின் பெற்றோர்கள் அவருக்கு பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் திருமணத்திற்கு பின்னரும் ராகுல், பத்மா காதல் தொடர்ந்தது. மனைவியிடம் தோழி என்று பத்மாவை ராகுல் அறிமுகம் செய்துள்ளார். நாளடைவில் ராகுல், பத்மாவின் காதலை கண்டுபிடித்த பூஜா, கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து பூஜாவை கொலை செய்ய ராகுலும் பத்மாவும் திட்டமிட்டனர்.

ராகுல் அலுவலகம் சென்றபோது அவரது வீட்டிற்கு வந்த பத்மா, பூஜைவை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் ராகுல் வீட்டிற்கு வந்தபோது ஒன்றுமே தெரியாதது போல நடித்து பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பூஜா சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். பூஜாவின் தற்கொலை கடிதமும் கிடைத்ததால் போலீசாரும் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். 

ஆனால் பிரேத பரிசோதனையில் பூஜாவின் கழுத்து எலும்பு உடைந்தது தெரிய வந்ததால் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல், பத்மாவை கைது செய்து போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். காதலிக்காக கட்டிய மனைவியை கொலை செய்த இருவரும் இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.