close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

Friday, June 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாகவே மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரசுக்கு பதவியில் இருக்கும் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டும் பலியாகி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரான சத்யேந்திர ஜெயின் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்கள் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ள நிலையில் தற்போது அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos