ஏற்கனவே 6 பைக்: 7வது பைக் வாங்கித்தராததால் தற்கொலை செய்த இளைஞர்

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

ஏற்கனவே ஆறு பைக் இருந்தும் ஏழாவது பைக் அப்பா வாங்கித் தராத கோபத்தில் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜிகுமார்-லேகா தம்பதியரின் மகன் அகிலேஷ். 19 வயதான அகிலேஷை, அஜிகுமார்-லேகா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வந்தனர். மகன் எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கும் இவர்கள் மகன் கேட்டார் என்பதற்காக தொடர்ச்சியாக ஆறு பைக்குகளை வாங்கிக் கொடுத்திருந்தனர். அதுபோக ஒரு சொகுசு காரும் இவர்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக் வேண்டும் என்று அப்பாவிடம் அகிலேஷ் கேட்க, அதற்கு அவருடைய அப்பா ஏற்கனவே ஆறு பைக் இருப்பதால் ஏழாவது பைக் தேவையில்லை என்று மறுத்துவிட்டாராம். இதனால் சில நாட்கள் தந்தையுடன் பேசாமல் கோபித்து கொண்டிருந்த அகிலேஷ், எப்படியும் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் இருந்து புதிய பைக் வாங்க முயற்சி செய்தாராம். ஆனால் அவரது முயற்சி பலிக்காததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அகிலேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் மகன் கேட்ட 14 லட்ச ரூபாய் பைக்கை வாங்கி கொடுக்க மறுத்ததால் செல்ல மகனை இழந்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

More News

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமண வேலையை

வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில்

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, 'உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்?

திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'ஆக்சன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது