close
Choose your channels

ஏற்கனவே 6 பைக்: 7வது பைக் வாங்கித்தராததால் தற்கொலை செய்த இளைஞர்

Thursday, November 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே ஆறு பைக் இருந்தும் ஏழாவது பைக் அப்பா வாங்கித் தராத கோபத்தில் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜிகுமார்-லேகா தம்பதியரின் மகன் அகிலேஷ். 19 வயதான அகிலேஷை, அஜிகுமார்-லேகா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வந்தனர். மகன் எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கும் இவர்கள் மகன் கேட்டார் என்பதற்காக தொடர்ச்சியாக ஆறு பைக்குகளை வாங்கிக் கொடுத்திருந்தனர். அதுபோக ஒரு சொகுசு காரும் இவர்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக் வேண்டும் என்று அப்பாவிடம் அகிலேஷ் கேட்க, அதற்கு அவருடைய அப்பா ஏற்கனவே ஆறு பைக் இருப்பதால் ஏழாவது பைக் தேவையில்லை என்று மறுத்துவிட்டாராம். இதனால் சில நாட்கள் தந்தையுடன் பேசாமல் கோபித்து கொண்டிருந்த அகிலேஷ், எப்படியும் அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் இருந்து புதிய பைக் வாங்க முயற்சி செய்தாராம். ஆனால் அவரது முயற்சி பலிக்காததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அகிலேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் மகன் கேட்ட 14 லட்ச ரூபாய் பைக்கை வாங்கி கொடுக்க மறுத்ததால் செல்ல மகனை இழந்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.