close
Choose your channels

திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா, நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருக்கும் ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது உதவி இயக்குனர்களில் ஒருவரான முகமது இக்பால் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உதவி இயக்குனர் இக்பால் முகமது தன்னிடம் மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தேசிங்கு பெரியசாமி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது முகமது இக்பால் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.