close
Choose your channels

ரஜினிக்கு சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கிறாரா? தேசிங்கு பெரியசாமி விளக்கம்..!

Friday, November 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் தொடக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தேசிங்கு பெரியசாமி ரஜினிக்கு கூறிய கதையில்தான் சிம்பு நடிக்கிறார் என்றும் பெரிய அளவில் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ சிம்புக்காக எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

ரஜினிக்கு அந்த கதையை கூறிய போது அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது, ஆனால் அந்த படம் எதிர்பாராத காரணத்தினால் தொடங்கப்படவில்லை. அதே கதையை நான் சிம்புவுடன் கூறிய போது அவர் முதல் முறை கேட்டபோது அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்த படம் ஒரு பீரியட் படமாகவும் மாஸ் மற்றும் கமர்சியல் படமாகவும் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தேசிங்கு பெரியசாமி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.