close
Choose your channels

'நானே என்னை அசிங்கப்படுத்திகிட்டேன்': பிக்பாஸிடம் கதறி  அழுத தனலட்சுமி!

Monday, November 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தனலட்சுமி முறைகேடாக விளையாடியதாக கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார் என்பதும் இதனை அடுத்து அவரிடமிருந்த வெற்றியை பிடுங்கி விக்ரமனுக்கு கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நேற்றைய நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதனை அடுத்து தனலட்சுமி பாத்ரூமுக்கு சென்று கதறி அழுத காட்சியுடன் நேற்றைய எபிசோடு முடிந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் தனலட்சுமி கன்ஃபெக்சன் அறையில் பிக்பாஸ் முன் கதறி அழும் காட்சி உள்ளது.

அதில் ’நான் ரொம்ப கனவுகளோடு இங்கே வந்தேன். ஆனால் இங்கே வந்து நானே என்னை அசிங்கப்படுத்தி கொண்டேன். என்னால் வெளியில் சொல்ல முடியாத அவமானம் ஏற்பட்டது. எனக்கு ரொம்ப அவமானமாக உள்ளது.

ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என்று எனக்கு தெரியாது. நான் நியாயமாக விளையாடிக் கொண்டிருக்கின்றேன், சரியாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இந்த இடத்திற்கு வந்தேன். என் மேல் திருட்டு பட்டம் வந்து விட்டது, நான் திருடியா? என்று அவர் கதறி அழுத காட்சியுண்ட புரமோ முடிவுக்கு வருகிறது.

இதனை அடுத்து தனலட்சுமியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.