close
Choose your channels

ரஜினிகாந்த் முன் சமரச பேச்சு.. மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா?

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் ரஜினிகாந்த் முன் சமரசம் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் பிரிவதாக அறிவித்தனர். ஆனாலும் இன்னும் சட்டப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மகன் பள்ளி விழாவில் இருவரும் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படம் வைரலாகி மீண்டும் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ரஜினிகாந்த் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியை மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சி செய்து வருவதாகவும் இதனால் தற்போதைக்கு இருவரும் விவாகரத்து முடிவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணையும் செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos