விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா ரகசிய சந்திப்பா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் ரகசியமாக சந்தித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த் நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக சந்தித்து இருப்பதாக ஒரு வதந்தி இணையதளத்தில் பரவி வருகிறது.

ஆரியபுரம் என்ற பகுதியில் உள்ள பிளாட்டில் தான் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா சந்தித்து வருவதாகவும் இந்த சந்திப்பின்போது குழந்தைகளின் எதிர்காலத்தை பண்ணிட்டு இருவரும் மீண்டும் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பிலிருந்தும் எந்தவித அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன் போட்டோ எடுக்கும்போது விக்கி என்ன செய்கிறார் பாருங்க: வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது தாய்லாந்து நாட்டில் தேனிலவில் இருக்கும் நிலையில் அவர் போட்டோ எடுக்கும்போது விக்னேஷ் சிவன் செய்த செயல் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட உதயநிதி ஸ்டாலின்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கேக் ஊட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இளையராஜா இசையில் பாடிய பாடகிக்கு இன்று மறுமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

இசைஞானி இளையராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடகிக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. 

ரோப் கயிற்றில் தொங்கும் த்ரில் அனுபவம்: சூர்யா-ஜோதிகாவின் சுற்றுலா வீடியோ

சூர்யா தனது குடும்பத்துடன் தற்போது கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய்சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது: வைரலாகும் ஷங்கர் டுவிட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.