நமக்காக போராடுபவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: தனுஷ்

ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. அப்படி நாம் இருப்பதால் நமது மருத்துவர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்

டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்

நாளை ஒரு நாள் மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு மிக அவசியம் என்றால் மட்டும் தேவையான பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். அவசிய தேவை இல்லையெனில் யாரும் வெளியேசெல்லாமல் வீட்டிலேயே இருக்கவும். ஒரு சில இளைஞர்கள் அசட்டு தைரியத்தால் வெளியே செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். மற்றபடி அரசு மற்றும் டாக்டர்கள் கூறியவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். நாளை மாலை ஐந்து மணிக்கு நமக்காக போராடி வரும் டாக்டர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்வோம். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
 

More News

அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே சென்னை மெட்ரோவில் அனுமதி: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே.

எது சூரியனில் இருந்து கொரோனா வேவ் வருதா?!.. வாட்சப் வதந்திகளை நம்பாதீர்கள் மக்களே..!

லதா மேடம் ஒன்னும் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொன்ன முக்கிய தகவலை பயத்தோடு மற்றவர்களுக்கு பகிர. முதலில் யார் அந்த லதா மேடம்..?!

கொரோனா குறித்த பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்: பிரபல நடிகரின் வீடியோ

கொரோனா வைரஸை எதிர்கொள்ள, வைரஸின் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவின் தீவிரம் குறித்தும்

வீட்டை விட்டு வெளியே வந்தால் இரண்டு வருடம் ஜெயில், 25000 அபராதம்: அதிரடி அறிவிப்பு 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு: அமைச்சர் தகவல்

பல நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே