நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்?

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் கடந்த ஜூன் மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனுஷ் ஜோடியாக சாரா அலி கான் நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் வரும் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் தற்போது ’மாறன்’ மற்றும் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் நிச்சயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

அமலாவை அடுத்து 30 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் தமிழ் நடிகை!

கடந்த எண்பதுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த அமலா மீண்டும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வந்துள்ளார் என்பதும் அவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு

மாஸ் ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா!

நடிகர், இயக்குனர் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது 'பாகீரா' உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவைகளில் ஒரு சில படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகனுக்கு ஞானஸ்தானம் செய்த சாண்டி: வைரல் புகைப்படங்கள்

பிரபல நடன இயக்குனர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதையும் தனது மகனுக்கு அவர் ஷான் மைக்கேல் என்ற பெயரை

'வெந்து தணிந்தது காடு' நாயகியா இவர்? கலக்கும் கிளாமர் போட்டோஷூட்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் அவர்களின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்

தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்தாரா விஜய்? எஸ்.ஏ.சி வீடியோ வைரல்!

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்து