தனுஷின் 'D51' படம் 40 வருடத்திற்கு முந்தைய அரசியல் கதையா? நாகார்ஜுனாவுக்கு என்ன கேரக்டர்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் நடித்து இயக்கி வரும் ’D50’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’D51’ படத்தின் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
நேற்று இந்த படத்தில் நாகார்ஜுனா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. இது ஒரு திரில்லிங்கான அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்றும் 40 வருடங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் மற்றும் மாபியா கூட்டம் நிகழ்த்திய சில சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகார்ஜுனா அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments