தனுஷின் இரண்டு படங்களை கைப்பற்றியது லைகா நிறுவனம்?

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்துடன் தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா நிறுவனம், 'நானும் ரெளடிதான்' படத்தை கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வரும் மற்றொரு படமான 'விசாரணை' படத்தையும் லைகா நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.


விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'நானும் ரெளடிதான்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். போடா போடி' பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

'விசாரணை' படத்தை உலக அளவிலும், 'நானும் ரெளடிதான்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ள லைகா நிறுவனம், இரண்டு படங்களையும் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் 'விசாரணை' ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

More News

21 வருடங்கள் கழித்து தெலுங்கில் ரீ- எண்ட்ரி ஆகும் மோகன்லால்

இளையதளபதி விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் நடித்த 'ஜில்லா' திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல ...

தரமான வெற்றி பெற்ற தனி ஒருவனின் ரகசியம்

சமீபகாலங்களில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு பலவிதமான டெக்னிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமுக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஹேஷ்டேக்குகள் உருவாக்கி...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி'யில் கமல்-ரேவதி?

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரம்...

தமிழில் டப் ஆகும் மீரா ஜாஸ்மினின் மலையாள படம்

சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன..

ஆர்யா,சூர்யா, விஷால் பாணியில் அருண்விஜய்?

கோலிவுட்டில் தற்போது நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், ஆர்யா...