close
Choose your channels

தனுஷின் இரண்டு படங்களை கைப்பற்றியது லைகா நிறுவனம்?

Wednesday, September 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்துடன் தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா நிறுவனம், 'நானும் ரெளடிதான்' படத்தை கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வரும் மற்றொரு படமான 'விசாரணை' படத்தையும் லைகா நிறுவனம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.


விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'நானும் ரெளடிதான்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். போடா போடி' பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

'விசாரணை' படத்தை உலக அளவிலும், 'நானும் ரெளடிதான்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ள லைகா நிறுவனம், இரண்டு படங்களையும் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் 'விசாரணை' ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.