close
Choose your channels

தோனிக்காக வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தல தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பி வருகின்றனர். இதனால் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவரது வீட்டிற்கு ஜார்கண்ட் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் ’வென்றாலும் வீழ்ந்தாலும் தோனி தான் எங்கள் தல’ என்று தோனியின் தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை அடுத்த அரங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். துபாயில் பணிபுரிந்து வரும் இவர் தோனியின் தீவிரமான ரசிகர். இவர் தல தோனி மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது வீட்டை ஒன்றரை லட்சம் செலவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து உள்ளார். அதுமட்டுமின்றி வீட்டின் சுவர்களில் தோனியின் உருவப் படங்களையும் வரைந்து விசில் போடு என்ற வாசகம் வைத்துள்ளார். மேலும் இதில் தோனியின் ரசிகர் வீடு என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்

இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களின் ஆட்டமும் சிறப்பாக இல்லை என்றாலும் அந்த அணியின் ரசிகர்கள் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.