வெற்றிக்கு பின் பொறுப்பான தந்தையாக மாறிய தல தோனி
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ராயுடு ஆகியோர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் பார்வையாளர்களுக்கு ஒரு வானவேடிக்கை கிடைத்தது. பெங்களூர் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி, சென்னை அணி 206 என்ற இமாலய இலக்கை விரட்டி சென்று 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் காரணமாக இருந்தது.
இந்த நிலையில் வின்னிங் ஷாட்டான சிக்சரை அடித்து முடித்தவுடன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக மைதானத்தை விட்டு வெளியேறிய தோனி, வீட்டுக்கு சென்றவுடன் அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தது என்ன தெரியுமா?
தோனி தனது மகள் கூந்தலை உலர்த்தும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்து பின்னர் அதில், 'போட்டி முடிந்துவிட்டது. நல்ல தூக்கம் தூங்கினேன். தற்போது இது தந்தையின் கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள தந்தையாக மகள் கூந்தலை உலர்த்தும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.