விக்ரம் இல்லாமலேயே முடிவடைகிறதா 'துருவ நட்சத்திரம்? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால் இந்தப் படம் முழுமையாகி விடும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் சம்பள பாக்கி உள்ளிட்ட ஒருசில பிரச்சனை காரணமாக 6 நாட்கள் படப்பிடிப்பிற்கு விக்ரம் வரவில்லை என்றும் அவரிடம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாமலேயே படத்தை முடிக்க இயக்குனர் கௌதம் மேனன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து கிளைமாக்ஸில் திட்டமிடப்பட்டிருந்த காட்சிகள் இடைவேளையின்போதும், கிளைமாக்ஸ் காட்சிகள் வேறுவிதமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் வட்டாரங்கள் கூறுகையில் ‘இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்புக்கு விக்ரம் கண்டிப்பாக வருவார் என்றும் இந்த படத்தின் மீது விக்ரம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், விக்ரம் காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னரே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

More News

சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் தமன்னா; டைட்டில் அறிவிப்பு

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் ஒரு இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சூரரை போற்று படத்தின் உண்மையான வியாபாரம் எவ்வளவு? பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக போகிறது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது: விநாயகர் சிலை விவகாரம் குறித்து உதயநிதி விளக்கம்

நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி

அப்படியே முகத்தில் குத்துவேன்… கேள்வியைச் சமாளிக்க முடியாமல் பத்திரிகையாளரை மிரட்டிய அதிபர்!!!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அதிபராக பதவி ஏற்றுக்கொண்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பிலிப்பைன்ஸில் ஒரேநாளில் அடுத்தடுத்த 2 குண்டுவெடிப்பு!!! குலைநடுங்கும் சம்பவம்!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 12 மணி மற்றும் 1 மணி என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.