close
Choose your channels

விக்ரம் இல்லாமலேயே முடிவடைகிறதா 'துருவ நட்சத்திரம்? பரபரப்பு தகவல் 

Monday, August 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால் இந்தப் படம் முழுமையாகி விடும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் சம்பள பாக்கி உள்ளிட்ட ஒருசில பிரச்சனை காரணமாக 6 நாட்கள் படப்பிடிப்பிற்கு விக்ரம் வரவில்லை என்றும் அவரிடம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாமலேயே படத்தை முடிக்க இயக்குனர் கௌதம் மேனன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து கிளைமாக்ஸில் திட்டமிடப்பட்டிருந்த காட்சிகள் இடைவேளையின்போதும், கிளைமாக்ஸ் காட்சிகள் வேறுவிதமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் வட்டாரங்கள் கூறுகையில் ‘இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்புக்கு விக்ரம் கண்டிப்பாக வருவார் என்றும் இந்த படத்தின் மீது விக்ரம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும், விக்ரம் காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னரே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.