விஜய்யின் 'தெறி'க்காக 40 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய அட்லி

  • IndiaGlitz, [Tuesday,December 22 2015]

விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சுமார் 50 வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆக்ரோஷமாக மோதிய கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிவதாகவும் குறிப்பாக இயக்குனர் அட்லி மற்றும் கேமராமேன் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.


கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி 6 நவீன கேமராக்களின் உதவியோடு படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே அட்லியும் ஜார்ஜூம் இதுகுறித்து ஆலோசனை செய்வதாகவும், இந்த நேரங்களை கணக்கிடும்போது இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், பிரபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளிவெங்கட் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் 'பாகுபலி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து இந்திய திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குனர்...

'சிங்கம்' படத்தை எதிர்பார்த்து வரவேண்டாம். 'பசங்க 2' பிரஸ்மீட்டில் சூர்யா

இயக்குனர் பாண்டியராஜ் இயகத்தில் சூர்யா, அமலாபால் நடித்த 'பசங்க 2' திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடந்தது.

பொங்கல் போட்டியில் இருந்து விலகியது அரண்மனை 2'

ஜனவரியில் வரும் பொங்கல் திருநாளில் நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த நாளில் படத்தை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். 2016...

6,000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'பாஜிராவ் மஸ்தானி

ரன்வீர்கபூர், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' கடந்த வெள்ளியன்று...

சுசீந்திரனின் அடுத்த படத்தில் உதயநிதி?

ஒருகல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதன்பின்னர் 'நண்பேண்டா'...