close
Choose your channels

விஜய்யின் 'தெறி'க்காக 40 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய அட்லி

Tuesday, December 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சுமார் 50 வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆக்ரோஷமாக மோதிய கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிவதாகவும் குறிப்பாக இயக்குனர் அட்லி மற்றும் கேமராமேன் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.


கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி 6 நவீன கேமராக்களின் உதவியோடு படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே அட்லியும் ஜார்ஜூம் இதுகுறித்து ஆலோசனை செய்வதாகவும், இந்த நேரங்களை கணக்கிடும்போது இருவரும் தொடர்ச்சியாக 40 மணி நேரம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், பிரபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், அழகம்பெருமாள், காளிவெங்கட் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.