சிம்புவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த படத்தின் இயக்குனர் ஜலீல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த ‘மஹா’ படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முதலில் ஒப்பந்தமானார். ஆனால் அதன் பிறகு அவருடைய கேரக்டர் விரிவக்கபட்டதாகவும் இந்த படத்தில் சிம்பு தற்போது ஹீரோ போல் நடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும், இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஜலீல், ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்படும் தகவல் பொய்யானது. சிம்பு ரசிகர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொண்டுள்ளேன். நான்கு ஆண்டுகளாக ‘மஹா’ படத்திற்காக பொறுமை காத்த சிம்புவின் ரசிகர்கள் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

சிம்பு ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் லட்சுமண் ஒளிப்பதிவும் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு பணிகளையும் செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நடிகர்-தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா தொற்று மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் காலமாகி வருவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை

மகத் வீட்டில் நடந்த விசேஷம்: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்

நன்றி அம்மா: யார்க்கர் கிங் நடராஜனின் அன்னையர் தின நெகிழ்ச்சியான பதிவு!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

விஷாலின் அடுத்த படத்தில் முக்கிய நடிகையாகும் டப்பிங் கலைஞர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் 'எனிமி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு