close
Choose your channels

காலையில் பாசிட்டிவ், மாலையில் நெகட்டிவ்: மணிரத்னம் கொரோனா செய்தியால் பரபரப்பு!

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள மணிரத்னம் அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென இன்று காலை மணிரத்னம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தற்போது கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் தனது வழக்கமான வேலைகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் கொரோனா பாஸிட்டிவ், மாலையில் கொரோனா நெகட்டிவ் என்ற மணிரத்னம் குறித்த கொரோனா செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.