இந்த இயக்குனரின் மகன் இறந்ததும் PSBB பள்ளியில் தான்: திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

கடந்த இரண்டு நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை காவல்துறை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பள்ளியில் ராஜகோபாலன் போலவே பல ஆசிரியர்கள் பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’மாசிலாமணி’ ’வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகரின் மகன் ரஞ்சன் இறந்த விவகாரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் மனோகரனின் மகன் ரஞ்சன் அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பலியானார். நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவு காரணமாகவே ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த சம்பவத்தை அடுத்து நீச்சல் குள பயிற்சியாளர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தற்போது 9 வருடங்களுக்கு பின் வைரலாகி வருகிறது.

More News

தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்: காயத்ரி ரகுராம்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படம் வெளிவந்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

ஒரு வயதில் விஜய் டிவி ரக்‌ஷன்: பக்கத்தில் இருக்கும் குட்டிப்பாப்பா யாரு தெரியுமா? 

விஜய் டிவியில் தொகுப்பாளர்களில் ஒருவரான ரக்‌ஷனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கிய விதம் அனைவரும் பாராட்டத்தக்க

சொந்த ஊரில் தடுப்பூசி எடுத்து கொண்ட இயக்குனர் இமயம்: வைரல் புகைப்படங்கள்!

கொரனோ வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசிக்கு அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் உயரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு...! பாதுகாப்பாக இருங்க மக்களே....!

தமிழகத்தில் சுமார் 256 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

ரெக்கவர் செய்த ராஜகோபாலன் லேப்டாப்....! வெளியான அதிர்ச்சி தகவல்கள்...!

ராஜகோபாலன்  மாணவிகளிடம் எப்படி பாலியல் சீண்டல்களை தொடர்ந்தான் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.