close
Choose your channels

இந்த இயக்குனரின் மகன் இறந்ததும் PSBB பள்ளியில் தான்: திடுக்கிடும் தகவல்!

Wednesday, May 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை காவல்துறை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பள்ளியில் ராஜகோபாலன் போலவே பல ஆசிரியர்கள் பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’மாசிலாமணி’ ’வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகரின் மகன் ரஞ்சன் இறந்த விவகாரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் மனோகரனின் மகன் ரஞ்சன் அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பலியானார். நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவு காரணமாகவே ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த சம்பவத்தை அடுத்து நீச்சல் குள பயிற்சியாளர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தற்போது 9 வருடங்களுக்கு பின் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos