close
Choose your channels

ஹீரோவாக அறிமுகமாகும் கிராமத்து இயக்குனரின் மகன்.. முதல் படத்திலேயே 2 ஜோடி..!

Thursday, February 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் கிராமத்து கதை அம்சத்தில் பல படங்கள் இயக்கிய இயக்குனர் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் முதல் படத்திலேயே அவருக்கு இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ’குட்டிப்புலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதன் பின்னர் ’கொம்பன்’ ’மருது’ ’கொடிவீரன்’ ’தேவராட்டம்’ ’புலிக்குட்டி பாண்டி’ ’விருமன்’ ’காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ உள்ளிட்ட படங்களை முத்தையா இயக்கி உள்ளார் என்பதும் அவரது இயக்கத்தில் உருவான அனைத்து படங்களுமே கிராமத்து பாணி படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முத்தையாவின் புதிய படத்தில் அவரது மகன் விஜய் முத்தையா ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று மதுரையில் நடந்த நிலையில் இந்த படத்தில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி, பிரிகிடா சாகா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

ஆக்சன், காதல், செண்டிமெண்ட் என வழக்கம்போல் கிராமத்து பின்னணியில் இந்த படம் அமைய இருப்பதாகவும் கே.கே.ஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படம் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் குறிப்பாக திரையரங்கு செட்டில் உருவாக இருக்கும் ஒரு ஸ்டாண்ட் காட்சியை ஒரு வாரம் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.