கோடி கோடியாய் நிதி கொடுப்பதற்கு பதில் இதை செய்யலாம்: உச்ச நடிகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

தமிழகத்தில் உள்ள உச்ச நடிகர்கள் கோடிகோடியாய் கொரோனா நிவாரண நிதி அளிப்பதற்கு பதிலாக இதைச் செய்யலாம் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு கோடிக்கணக்கில் நிதி உதவி செய்வதற்கு பதிலாக உச்ச நடிகர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டால் அது பலரையும் சென்று சேரும் என்றும் அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில்
உச்சத்தில் உள்ள சில நடிகர்களின்
சின்ன அசைவுக்குகூட இங்கே
பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
அவர்களின் ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லப்படுகிறது.
அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக்கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில்
உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும்,
மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச்சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும்!
எத்தனை கோடி நிதி கொடுத்தாலும்,
அதைவிட இது பயனுள்ளதாக அமையும். நன்றி
வாழ்வோம்!
வாழ வைப்போம்!

பேரரசுவின் வேண்டுகோளை தமிழ் திரையுலக உச்சநடிகர்கள் ஏற்றுக்கொண்டு வீடியோவை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சின்ன வயதில் 'குக் வித் கோமாளி' பவித்ரா: எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் பாருங்கள்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் மூலம் வேற லெவல் பிரபலமானதால் தற்போது இவர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும்

நிதி அகர்வாலை அடுத்து ரூ.1 லட்சம் நிவாரண நிதி கொடுத்த பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி இ-பதிவு தேவையில்லை...! தளர்வுகள் வெளியானது...!

முன்களப்பணியாளர்களுக்கு இ-பதிவு முறை அவசியமில்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு அவசர உதவியைப் பெறுவது எப்படி?

தமிழகம் முழுவதும் நடைபெறும் கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான அழைப்புகள், விசாரணைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு கடந்த