close
Choose your channels

நிதி அகர்வாலை அடுத்து ரூ.1 லட்சம் நிவாரண நிதி கொடுத்த பிரபல நடிகை!

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரமுகர்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த நிதியில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மட்டும் கொரோனா தடுப்பு நிதி கொடுத்து வந்த நிலையில் தற்போது நடிகைகளும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதிஅகர்வால் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்த தகவல் சற்று முன் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பங்காக ரூபாய் ஒரு லட்சம் நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். மேலும் இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்து மேலும் சில நடிகைகள் தமிழக அரசுக்கு நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.