அன்புச்செழியன் உத்தமர்: அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டல் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இறந்ததாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகிய அவரை தேடும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்புச்செழியன் உத்தமர் என்றும் அவரை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் பிரபல இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...

இயக்குனர் சீனுராமசாமியின் இந்த கருத்து கோலிவுட் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டிக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமே குரல் கொடுத்து வரும் நிலையில், சீனுராமசாமியின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்த பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்

கந்துவட்டி கொடுமையால் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் அவரை போல இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை அனுபவித்ததாக தெரிய வருகிறது

அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது.

கந்துவட்டி தற்கொலை இரண்டு நாள் செய்தி மட்டுமே: டாக்டர் ராம்தாஸ்

கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

அன்புச்செழியன் வீட்டுக்கு ரெய்டு போங்க: அரசுக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாக நேற்று இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அன்புச்செழியனால் திரையுலகில் உள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளது

அசோக்குமார் தற்கொலை எதிரொலி: விஷால் எடுத்த அதிரடி முடிவு

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை கிட்டத்தட்ட ஆட்டங்காண வைத்துள்ளது. பல தயாரிப்பாளர்கள்