close
Choose your channels

அசோக்குமார் தற்கொலை எதிரொலி: விஷால் எடுத்த அதிரடி முடிவு

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை கிட்டத்தட்ட ஆட்டங்காண வைத்துள்ளது. பல தயாரிப்பாளர்கள் இதுபோன்று மிரட்டப்படுவதாகவும் அவர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் விஷால் அதிரடியாக உடனே இதுகுறித்து ஆய்வு செய்ய களமிறங்கியுள்ளார். முதல்கட்டமாக வரும் இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள சுமார் 50 படங்களின் தயாரிப்பாளர்களில் யார் மிரட்டப்படுகிறார்கள், அவர்கள் வாங்கிய கடன் தொகை எவ்வளவும், கட்டிய வட்டி எவ்வளவு? போன்ற விபரங்களை சேகரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழு கொடுக்கும் அறிக்கையை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களை கண்டறிந்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இந்த குழுவின் பணி என்றும் கூறப்படுகிறது. இனிமேலாவது தயாரிப்பாளர்கள் விழித்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.