'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி தள்ளிவைப்பா?

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. சென்சாருக்கு சென்று 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ல் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்க்கு முன் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரம்ஜான் திருநாளில் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜெயம் ரவின் 'வனமகன்', சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' உள்பட ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

More News

இயக்குனர் சிகரத்திற்கு சிலை எடுக்கும் பிரபல கவிஞர்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் தான் இன்று முன்னணியில் இருக்கும் பல நட்சத்திரங்கள். கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், உள்பட பலருக்கு இன்னமும் அவர்தான் மானசீக குரு

அர்த்தம் தெரியாமல் நடித்தார் அனுராக் காஷ்யப்: 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்.

என் பேரன் கல்யாணத்திற்குள்ளாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா? பிரபல அரசியல் தலைவர் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக முதல்வருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று திடீரென சந்தித்தார்.

விஜய்மல்லையா ஒரு திருடன்: லண்டனில் கோஷமிட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார்