விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது சிபி சக்கரவர்த்தியா? அவரே அளித்த விளக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கிய முதல் படமான ‘டான்’ நூறு கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து அவருக்கு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அட்லியின் உதவி இயக்குனராக இருந்த சிபிசக்கரவர்த்தி ‘தெறி’ ‘மெர்சல்’ உட்பட ஒரு சில படங்களில் பணிபுரியும்போதே விஜய்யுடன் நெருக்கமானதாக கூறப்பட்டது. மேலும் ‘டான்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே அவர் விஜய்யை சந்தித்து கதை கூறியதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்குவார் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, ‘தற்போது அடுத்த படத்தின் கதையை உருவாக்கி வருவதாகவும், கதை முடிந்த பிறகுதான் அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்வேன் என்றும் விஜய்யை வைத்து நான் படம் இயக்க இருப்பதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் விஜய்யின் படத்தை சிபி சக்கரவர்த்தி விரைவில் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

அஜித்தை இயக்குவது அவ்வளவு எளிது இல்லை: லோகேஷின் ஆச்சரியமான பதில்!

அஜித் படத்தை இயக்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என கேள்வி ஒன்றுக்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

அஜய் ஞானமுத்துவின் அடுத்த பட ஹீரோ இவரா? 

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர் யார்

இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் இவர்தான்: பிக்பாஸ் தமிழ் போட்டியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தாய்லாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களில் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருது கிடைத்துள்ளது.

ஸ்கூல் காலத்தில் இருந்தே சூர்யா மீது க்ரஷ்: விவாகரத்து பெற்ற தமிழ் நடிகை

பள்ளி காலத்தில் இருந்தே தனக்கு சூர்யா மீது க்ரஷ் என விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்ஷய் குமாரை அரெஸ்ட் செய்து நாடு கடத்த வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சி டுவிட்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சொந்த நாடான கனடா நாட்டிற்கு அவரை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் பிரபல அரசியல்வாதியும் எம்பியுமான சுப்பிரமணியன்