close
Choose your channels

2ஆம் பாகம், 3ஆம் பாகம் அவ்வளவு எளிதல்ல: 'அரண்மனை 3' பிரஸ்மீட்டில் சுந்தர் சி

Sunday, October 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரஸ்மீட் நடைபெற்றது

இந்த பிரஸ்மீட்டில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் சுந்தர் சி அவர்கள் ஒரு படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறினார். மேலும் மறைந்த நடிகர் விவேக்குடன் தான் பணியாற்றிய காலம் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றும் அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘அரண்மனை 3’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் முதல் பாகம், இரண்டாம் பாகம் போலவே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.