பயிற்சி வகுப்பு நடத்தி முதல்வர் நிவாரண நிதி கொடுத்த பிரபல இயக்குனர்!

தமிழக அரசு கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திரை உலக பிரமுகர்கள் பலர் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்தரன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கி உள்ளார். இந்த தொகைக்கான காசோலையை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதியிடம் அவர் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவும் எண்ணத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதில் கலந்துகொண்டோர் வழங்கிய கட்டண தொகை மொத்தமாக ரூபாய் 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்

இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மோத்தி, மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்களுக்கும், என் உதவியாளர் வினோத், வைசாலி, அவர்களுக்கும் மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்ப கலைஞர்கள் சரத் நிவாஸ், சரவணன், சூரியா தேவன் அவர்களுக்கும் முக்கியமாக இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச் செய்த அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளத்தினர்களுக்கும் ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று இயக்குனர் சுசிந்திரன் தெரிவித்துள்ளார்.


 

More News

பிக்பாஸ் தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்: அப்பவே அவர் குயின்தான்!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையுமான ஷெரின் தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ச்கள் குவிந்து வருகிறது

"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...! கதறும் குமார் kannis...!

ஆபாச பேச்சு பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த, மதனின் நிலை தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.

சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம்  விஸ்வநாதன்  சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை

கொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....! சீமான் வேண்டுகோள்...!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் உண்மை நிலவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள,