உதயநிதியிடம் ரூ.1.20 கோடி மதிப்பு வெண்டிலேட்டர் கருவிகளை கொடுத்த தங்கர்பச்சான்!

  • IndiaGlitz, [Sunday,July 25 2021]

பிரபல இயக்குநர் தங்கர் பச்சான், நடிகரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.20 மதிப்பிலான 14 போர்ட்டபிள் வெண்டிலேட்டர் கருவிகளை வழங்கினார்.

சமீபத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த தகவலை தனது கனடா நண்பருடன் இயக்குனர் தங்கர்பச்சான் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து அந்த கனடா நண்பர் ரூ.1.20 கோடி மதிப்பிலான போர்ட்டபிள் வெண்டிலேடர் கருவிகளை வாங்கி அனுப்பி வைத்தார்.

இந்த கருவிகளை இயக்குனர் தங்கர் பச்சான் நேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து கனடாவை சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான சுரேஷ் ரோஹின் அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பி வைத்திருந்த ரூ.1.20 கோடி மதிப்பிலான 14 போர்ட்டபிள் வெண்டிலேட்டர் கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கும் பொருட்டு ஒப்படைத்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

More News

'சார்பாட்டா பரம்பரை' வேம்புலியின் மனைவி இந்த பிரபல தொகுப்பாளினியா?

சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக இல்லாமல், அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்தது

நான் வேம்புலியாக மாற இந்த பெண் தான் காரணம்: 'சார்பாட்டா பரம்பரை' ஜான் கொக்கன் டுவிட்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும்

யாஷிகா ஆனந்த் கவலைக்கிடமா? மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சி தகவல்!

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து: உடன் சென்ற தோழி உயிரிழந்ததாக தகவல்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் யாஷிகா ஆனந்த் படுகாயம்

யோகிபாபு - சமுத்திரக்கனி கைகோர்த்துள்ள புதிய படம்....!

நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.