தேசிய விருது காத்திருக்கிறது: 'சர்வம் தாளமயம்' குறித்து பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,November 17 2018]

பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல இயக்குனர் வசந்தபாலன், இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்த நெடுமுடி வேணு அவர்களுக்கு தேசிய விருது காத்திருக்கின்றது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

நேற்று இரவு ஜீவியின் அன்பு அழைப்பின் பேரில் சர்வம் தாள மயம் திரைப்படத்தை காண வாய்ப்பு கிட்டியது. இசை திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம். WHIPLASH என்ற ஆங்கில திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு.குரு சிஷ்ய உறவை மையமாக கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிக கடினமான காரியம். அப்படத்திற்கு கதை எழுத ஆழமான இசையறிவு தேவை.

இசைக்குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் மேனன் அவர்கள் இந்த கதையை மிக அழகாக,ஆழமாக, நுட்பமாக, சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடிவேணு மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார். தேசிய விருது காத்திருக்கிறது. ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார்...

ஜீவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார். அவர் கண்களில் தெறிக்கும் தின்வயது குழப்பம், பதட்டம், தடுமாற்றம், அழுகை, வெறி ,ஏக்கம், காதல், குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார். ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது. வாழ்த்துகள் ஜீவி.......

ஏஆர்ஆர் நம்மை சர்வம் தாளமயம் என்று இந்த உலகை நுண்ணிப்பாய் கேட்க செய்துள்ளார். சற்றே கண்ணை மூடினேன். உலகின் சப்தங்களை இதயத்தால் கேட்க துவங்கினேன். மனசு சொன்னது சர்வம் தாள மயம்.

More News

பிரபல நடிகரின் மகளை மணக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன்

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ராம்சரண்தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: ஓட்டல் சப்ளைக்கு வந்தவையா?

ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்

எங்களை சாவடிக்காதே! யாஷிகா வீடியோவை பார்த்து வெறுப்பான நெட்டிசன்கள்

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுக்கு டைட்டிலை பெறும் தகுதி இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு அவர் அளித்த கண்மூடித்தனமாக ஆதரவால் மக்களால் வெறுக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

சத்யராஜ் நடிக்கும் அடுத்த படத்தில் திருமுருகன் காந்தி

நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல் நேற்று நாகை அருகே கோரத்தாண்டவம் ஆடி கரை கடந்தது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.