மீண்டும் எழுந்து வருவேன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னணி தமிழ் இயக்குனரின் பதிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் அதில் பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தி ஆகும். சமீபத்தில்கூட இயக்குனர் தாமிரா மற்றும் இயக்குநர் கேவி ஆனந்த் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்.

இயக்குனர் வசந்தபாலன் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதும், தற்போது ’ஜெயில்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

More News

'தளபதி 65' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது

'என்னடி முனியம்மா உன் கண்ணுல மை' புகழ் பாடகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கடந்த சில நாட்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் காலமாகி வருவது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விவேக், தாமிரா, கேவி ஆனந்த் உள்பட பலர் தொடர்ச்சியாக காலமாகி வரும்

கோவிட் நோயாளிகளுக்காக 'மாஸ்டர்' மாளவிகா செய்த உதவி!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 21 ஆயிரம் பேர்களுக்கு

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் மு.க.ஸ்டாலின்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 259 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

அஜித் உதவி செய்தும் வறுமையில் வாடும் தமிழ் நடிகர்!

தமிழ் நடிகர் ஒருவருக்கு தல அஜித் தனது சொந்த செலவில் போட்டோஷூட் எடுத்து பிரபலப்படுத்தியும் அந்த நடிகர் தற்போது வறுமையில் வாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.