close
Choose your channels

மீண்டும் எழுந்து வருவேன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னணி தமிழ் இயக்குனரின் பதிவு!

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் அதில் பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தி ஆகும். சமீபத்தில்கூட இயக்குனர் தாமிரா மற்றும் இயக்குநர் கேவி ஆனந்த் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்.

இயக்குனர் வசந்தபாலன் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதும், தற்போது ’ஜெயில்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.