எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்கேன்: விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கிட்டார் வாசிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இது குறித்து அவர் கூறிய போது, ‘எனக்கு கிட்டார் வாசிக்க எல்லாம் தெரியாது, எப்பொழுதும் டிரம்ஸ் தான் வாசித்துக் கொண்டிருப்பேன். திடீரென புதுசாக ஒரு இன்ஸ்ட்ருமென்ட் எடுத்து வாசிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் இந்த கிட்டாரை வாங்கி நான் வாசிக்க கற்றுக் கொள்வதற்காக வாங்கி வைத்துள்ளேன். இதை வாசித்து நான் எல்லாரையும் டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு சின்ன சின்ன விஷயங்கள் இருந்து, அதன்பின் வேலை காரணமாக அதிலிருந்து தூரமாகப் போய் விடுவோம். ஆனால் அந்த சின்ன சின்ன விஷயங்கள் திரும்பி வரும்போது வாழ்க்கை நமக்கு மிகவும் சுவராசியமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு அனுபவம் தான் இது’ என்று அவர் கூறி உள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய் படம் பார்க்க மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் காத்திருந்தேன்: 'மாஸ்டர்' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ்

சீறிப்பாய்ந்த சிறுத்தையிடம் தனியாளாகப் போராடி உயிர்பிழைத்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!!

மேற்கு வங்க மாநிலத்தில் டீ எஸ்டேட்டில் வேலைப் பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து தாக்கி இருக்கிறது.

நேற்று சிரிப்பு, இன்று அழுகை: ஹவுஸ்மேட்ஸ்களை அழவைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்கள் கடந்த 100 நாட்களில் கடந்து வந்த மகிழ்ச்சியான தருணங்களில் சில சில காட்சிகளை பிளாஸ்மா டிவியில் போட்டு காண்பிக்கப்பட்டது

4 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த  வழக்கு… நடந்தது என்ன?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆரி வேற மாறி… பிக்பாஸ் ஆரிக்காக ஒரு பாடல்… நட்பு ரீதியில் வெளியான அசத்தல் டிராக்!!!

இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார்.