சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார், அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள ஒரு த்ரில் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் 'இஷ்க்' மற்றும் 'மனம்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய விக்ரம்குமார் தற்போது அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்க உள்ளதால் தெலுங்கு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாதவன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய 'யாவரும் நலம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க தனது முதல் சாய்ஸ் மாதவன் என்றும் விக்ரம்குமார் கூறியுள்ளார்.

More News

'ஜித்து ஜில்லாடி'யை அடுத்து தேவா பாடிய குத்துப்பாடல்

ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய தேவா, கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்...

மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? கமலின் அடுத்த பட அழைப்பிதழ்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தொடங்கவுள்ளது...

ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி-விஷால்

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த லாபத்தில் நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டதும் மீதிப்பணம்...

சூர்யாவின் அடுத்த சமுதாய பணி நாளை முதல் ஆரம்பம்

பிரபல நடிகர் சூர்யா, நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையுடன் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறார்...

இயக்குனர் ஆகிறார் சித்தார்த் அபிமன்யூ

மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் அறிமுகமாகிய நடிகர் அரவிந்தசாமி சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்'...