close
Choose your channels

சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

Wednesday, April 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார், அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள ஒரு த்ரில் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் 'இஷ்க்' மற்றும் 'மனம்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய விக்ரம்குமார் தற்போது அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்க உள்ளதால் தெலுங்கு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாதவன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய 'யாவரும் நலம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க தனது முதல் சாய்ஸ் மாதவன் என்றும் விக்ரம்குமார் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.