close
Choose your channels

மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

 

பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபரைவிட விட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப் படும்போது விரைவிலேயே இறந்து போகின்ற அவலம் தொடர்ந்து நடக்கிறது. இதற்கு அதிகபடியான வைரஸின் துகள் காரணமாக இருக்குமோ என்று சந்தேகத்தை தற்போது விஞ்ஞானிகள் எழுப்பி உள்ளனர். United Kingdom இல் உள்ள Royal College of Physician மருத்துவமனையில் நடத்தப் பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 5 இல் 1 பகுதி மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டு அல்லது அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப் படுத்தப் படுவதாக தகவல் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் Medscape நடத்திய ஆய்வில் கொரோனா பாதிப்பினால், இதுவரை நூற்றுக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் இறந்து விட்டதாகவும் 630 சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறது. இதற்கு, மற்றவர்களைவிட மருத்துவர்களுக்கு பரவும் கொரோனா வைரஸின் துகள் அதிகமாக இருப்பதே காரணம் எனவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது மிகவும் நெருக்கமாக செல்ல வேண்டி இருப்பதால் அவர்களை மிக எளிதாக வைரஸ் தொற்றிக் கொள்கிறது என்றும் அப்படி பரவும் வைரஸின் துகள் மிகவும் அடர்த்தியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 2020-2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோய்ப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வைரஸ் துகளின் அளவு குறைவாக இருந்ததகாவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் வைரஸ் துகள்கள் குறைவாக இருந்ததாகவும் நோயின் தீவிரத்தில் வைரஸ் துகள்கள் மிகவும் வீரியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது கொரோனா விஷயத்திலும் இதுபோல வைரஸ் துகள்களின் அளவும் மாறுபடுமோ எனவும் தற்போது புதிய கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியில் 5 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் துகள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு வைரஸ் துகள்கள் குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 கொரோனா நோயாளிகளை வைத்து நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் அறிகுறிகளே இல்லாமல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களுக்குப் பெரும்பாலும் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே வைரஸ் அவர்களது உடலை விட்டு சென்று விட்டதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் சீனாவில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வரும் 76 நோயாளிகளிடம் அதிக சுமைக்கொண்ட கொரோனா வைரஸ் துகள்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா வார்டுகளில் வேலைப்பார்க்கும் மருத்துவர்கள் சுகாதார வல்லுநர்கள் அதிகநேரம் தூங்கும்போது அவர்களை எளிதில் நோய்கள் அண்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. பொதுவாக தூக்கம் குறையும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாவதாகவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது. இத்தகைய தரவுகளை வைத்துக்கொண்டு மருத்துவர்களின் வேகமான இறப்புக்கு கொரோனா வைரஸ்களின் அதிக துகள்கள்தான் காரணம் எனக் கூறப்பட்டாலும் அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.