சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி சிகிச்சை பெற்ற புகைப்படம்: இணையத்தில் வைரல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் மரணம் அடைந்த தகவல் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் சாதாரண இசை ரசிகன் வரை அனைத்து தரப்பினர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெகு அரிதாகவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது குறித்த புகைப்படம் ஒன்று சற்று முன் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் எஸ்பிபி அவர்கள் உட்கார்ந்து இருப்பது போலவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போலவும் உள்ளது. எஸ்பிபியின் மறைவிற்குப் பின் முதன்முதலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த புகைப்படம் வெளிவந்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More News

இளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சி சம்பவம்!!!

பொதுவாக ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்திய (வைரஸ், பாக்டீரியா) போன்ற நோய்க்கு எதிராக அவரது உடலில் எதிர்ப்பு ஆன்டிபாடி உருவாகி இருக்கும்.

எந்த பாடகருக்கும் இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவிற்கு திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எஸ்பிபி இறுதிச்சடங்கு குறித்த தகவல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமான நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி உடல் இறுதி அஞ்சலிக்காக

எஸ்பிபி மறைவு: அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.