close
Choose your channels

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி சிகிச்சை பெற்ற புகைப்படம்: இணையத்தில் வைரல்

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் மரணம் அடைந்த தகவல் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் சாதாரண இசை ரசிகன் வரை அனைத்து தரப்பினர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெகு அரிதாகவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது குறித்த புகைப்படம் ஒன்று சற்று முன் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் எஸ்பிபி அவர்கள் உட்கார்ந்து இருப்பது போலவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போலவும் உள்ளது. எஸ்பிபியின் மறைவிற்குப் பின் முதன்முதலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த புகைப்படம் வெளிவந்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.