close
Choose your channels

கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்!

Tuesday, August 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜருகுமல்லி என்ற பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் காந்தாராவ் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவரது உடல் மருத்துவமனைக்கு வெளியே உள்ள வளாகத்தில் காணப்பட்டது. அந்த உடலை அங்கிருந்து தெரு நாய்கள் கடித்து குதறியதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தெரு நாய்களால் கடித்துக் குதறப்பட்ட முதியவரின் உடலை எடுத்து சென்று சவக்கிடங்கில் வைத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காந்தாராவ் எப்படி இறந்தார்? உயிருடன் இருக்கும் போதே அவர் வெளியே சென்று மருத்துவமனையைச் சுற்றி வந்தபோது கீழே விழுந்து இறந்து விட்டாரா? அல்லது மருத்துவமனையில் இறந்த அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி வெளியே வீசினார்களா? என்பது குறித்து பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரின் உடல் தெருநாய்களால் குதறப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment