சரிந்துபோன பொருளாதாரம் எப்போது உயரும்… விளக்கும் பிரத்யேக வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10-24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் சிறு, குறு வணிகம் முதற்கொண்டு அனைத்து பெரு வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கும். இதனால் வணிகர்களுக்கு மட்டும் அல்ல அரசிற்கும் வரிவருவாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கடந்த ஊரடங்கு காலத்தின்போதே தமிழகத்தின் ஜிடிபி குறைந்து விட்டதாகப் பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். ஒரு காலத்தில் இந்தியாவிலேயே அதிக ஜிடிபி கொண்டு இருந்த தமிழகம் தற்போது கொரோனா பாதிப்பினால் மொத்த வரி வருவாயையும் இழந்து இருக்கிறது.

இதுபோன்ற நிலைமைகளில் சமானிய மக்களின் பொருளதாரம் அதைவிட கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் சிறு, குறு வணிக நிறுவனங்களும் பெரும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும்போது அன்றாடக் கூலிகளின் நிலைமை அதிவிட மோசமாகி இருக்கிறது. இதனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்ற தவணை கடனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் படியும் அதேபோல அதிகபடியான சேவை வரியை ரத்து செய்ய வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கார், வீடு போன்ற பொருட்களுக்கு வாங்கி இருக்கும் லோனை திருப்பி செலுத்துவற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இழந்து போன வரி வருவாயை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்ற கேள்வியை பொருளாதார அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கு பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான சோம வள்ளியப்பன் அவர்கள் பதில் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.

More News

எந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்...! சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....!

திமுக சட்டமன்ற உறுப்பினரான  அப்பாவு அவர்களின் சுவாரசியமான அரசியல் வாழ்க்கை, அவர் அரசியலில் கால் தடம் பதித்தது எப்படி என்பதை பார்க்கலாம்.

பில்கேட்ஸ்- மிலிண்டா மணவாழ்க்கை கசந்தது ஏன்? வெளியான தகவல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதிகளான பில்கேட்ஸ்– மிலிண்டா தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு விவகாரத்து

டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் வீடியோ: தலைவி வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட்!

டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா தற்போது 'நீ சுடத்தான் வந்தியா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், முழுக்க முழுக்க கவர்ச்சி திரைப்படமான இந்த படம் விரைவில்

கொரோனாவால் கார்த்தி படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து தொழிலும் முடங்கி உள்ளது போல் திரையுலகமும் கிட்டத்தட்ட முடங்கும் நிலைக்கு வந்து விட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுக்கப்பட்ட அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நிகழ்ச்சியின்