'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் உருவாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் கமல்ஹாசன் கௌதமி நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ’த்ரிஷ்யம் 2’ படத்தையும் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜீத்து ஜோசப்பை சமீபத்தில் சந்தித்து பேசியபோது அவருக்கு ’த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் அந்த படத்தையும் அவர் இயக்குவார் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ’த்ரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்

More News

திருமணத்தை முன்னிட்டு தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹிட் பட நடிகை!

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவர் தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் பேச்சிலர் பார்ட்டி

ப்ரியா அட்லியும் பேபியும்: வைரலாகும் புகைப்படம்!

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அட்லி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவி பிரியா அட்லி ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி கவிழ்ந்தது!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வந்தனர்.

செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்… சுவாரசியத் தகவல்!

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகன் அருள்நிதி முதற்கொண்டு அனைவரும் செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறி நின்று பேசும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து, நூலிழையில் உயிர் பிழைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

ஹரியாணா மாநிலத்தில் தண்டவளாத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் திடீரென வந்துவிட்ட ரயிலைப் பார்த்து அதிச்சி அடைந்து தண்டவாளத்திலேயே நின்று இருக்கிறார்.