close
Choose your channels

'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் உருவாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்!

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் கமல்ஹாசன் கௌதமி நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ’த்ரிஷ்யம் 2’ படத்தையும் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜீத்து ஜோசப்பை சமீபத்தில் சந்தித்து பேசியபோது அவருக்கு ’த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் அந்த படத்தையும் அவர் இயக்குவார் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ’த்ரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.