ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'த்ரிஷ்யம்: ஒரே ஒரு மாற்றம் என இயக்குனர் தகவல்!

  • IndiaGlitz, [Friday,February 12 2021]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த திரைப்படம் மலையாளத் திரையுலகில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மோகன்லால், மீனா, ஆஷாசரத் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் ரீமேக் ஆனது. அதேபோல் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும், கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவையும் தாண்டி சீனாவிலும் இந்த படம் ரீமேக் ஆகி அங்கும் மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் செய்ய இருப்பதாக ஜீத்து ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் இந்த படத்தின் ரீமேக்கிற்காக தன்னை அணுகியதாகவும் அதன்படி ஆங்கிலத்தில் ஸ்கிரிப்டை அனுப்பி வைத்ததாகவும் விரைவில் நல்ல தகவல் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

‘த்ரிஷ்யம் படத்தின் அனைத்து படங்களிலும் கொலைக்கான தடயங்களை மறைக்கும் வேலையை ஹீரோ செய்வார் என்ற நிலையில் ஹாலிவுட்டில் மட்டும் அது ஹீரோயின் செய்வதுபோல ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படம் ஹாலிவுட்டில் தயாராகுவது உறுதி செய்யப்பட்டால் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஹிலாரி சுவாங் என்பவர் ஹீரோயினாக நடிப்பார் என்றும் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

More News

முன்னணி நடிகையின் வில்வித்தை பயிற்சி… குவியும் லைக்குகள்!

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வில்வித்தை செய்வது போல ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 10 பேர் உயிரிழந்த கொடூரம்!

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் தற்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது.

மலக்குடலில் வைத்து 5 கிலோ தங்கம் கடத்தல்? அதிர்ச்சி சம்பவம்!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிலர் மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்- 6 பேர் கைது!

ஹைத்ராபாத்தில் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரை பயணம் செய்த ஆட்டோ டிரைவரே கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்? சுவாரசியமான அறிவிப்பு!

20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை கரூரில் இயங்கிவரும் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.