close
Choose your channels

தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து? கைதாகும் பிரபல நடிகைகள்?

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து நடந்ததாக காவல் துறையினர் கண்டுபிடித்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய 86 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பிரபல நடிகைகளும் இருப்பதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு புறநகர் பகுதியில் தொழிலதிருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விருந்தில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதிரடியாக காவல்துறையினர் சோதனை செய்தபோது இந்த விருந்தில் நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் போதை மருந்து விருந்து வைத்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விருந்தில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நடிகை ஹேமா, நடிகை ஆஷா ராய் ஆகியோர் பங்கேற்றதாக போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இரு நடிகைகள் உள்பட 86 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை செய்த பிறகு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஹேமா மற்றும் நடிகை ஆஷா ராய் ஆகிய இருவரும் பண்ணை வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம், ஆனால் அங்கு போதை விருந்து நடைபெற்றது எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.